செய்திகள்
கோப்புப்படம்

கர்நாடகாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 10,959 பேருக்கு கொரோனா பாதிப்பு

Published On 2021-06-09 18:19 GMT   |   Update On 2021-06-09 18:19 GMT
கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 2 லட்சத்து 15 ஆயிரத்து 525 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். வைரஸ் பாதிப்பில் இருந்து ஒரேநாளில் 20 ஆயிரத்து 246 பேர் குணமடைந்துள்ளனர்.
பெங்களூரு:

கர்நாடக மாநிலத்தில் கொரோனா வைரசின் இரண்டாவது அலை காரணமாக தொற்று பாதிப்பு தீவிரமடைந்து வருகிறது. அதன்படி, கர்நாடக சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலில் மாநிலத்தில் இன்று புதிதாக 10 ஆயிரத்து 959 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 27 லட்சத்து 28 ஆயிரத்து 248 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 2 லட்சத்து 15 ஆயிரத்து 525 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். வைரஸ் பாதிப்பில் இருந்து ஒரேநாளில் 20 ஆயிரத்து 246 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், கர்நாடகாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 24 லட்சத்து 80 ஆயிரத்து 411 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா தாக்குதலுக்கு கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 192 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், கர்நாடகாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 32 ஆயிரத்து 291 ஆக அதிகரித்துள்ளது.

Tags:    

Similar News