ஆன்மிகம்
சிவன்

தென்காளகஸ்தி சிவன் கோவிலில் ராகு கால பிரதோஷம் நாளை நடக்கிறது

Published On 2020-08-29 06:28 GMT   |   Update On 2020-08-29 06:28 GMT
ஈத்தாமொழி அருகே இலந்தையடிதட்டில் ராகு கேது, சனீஸ்வரர் பரிகார ஸ்தலமான தென்காளகஸ்தி சிவன் கோவிலில் ராகுகால பிரதோஷம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.
ஈத்தாமொழி அருகே இலந்தையடிதட்டில் ராகு கேது, சனீஸ்வரர் பரிகார ஸ்தலமான தென்காளகஸ்தி சிவன் கோவில் அமைந்துள்ளது. இங்கு ராகுகால பிரதோஷம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.

நாளை மாலை 5.30 மணிக்கு காளகஸ்தீஸ்வரர், நந்தி பகவான் மற்றும் ராகு கேதுக்கு அபிஷேகம், அலங்காரம், பரிகாரம் போன்றவை நடக்கிறது. வருகிற 1-ந் தேதி ராகு கேது பெயர்ச்சி விழா நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை சிவாலய திருப்பணி கமிட்டி உறுப்பினர்கள் செய்துள்ளனர்.
Tags:    

Similar News