செய்திகள்
கோப்பு படம்.

வேளாங்கண்ணி அருகே பாம்பு கடித்து பெண் ஊராட்சி உறுப்பினர் பலி

Published On 2021-04-26 10:54 GMT   |   Update On 2021-04-26 10:54 GMT
வேளாங்கண்ணி அருகே வயலில் தண்ணீர் பாய்ச்சி கொண்டிருந்த பெண்ணை பாம்பு கடித்ததில் பரிதாபமாக உயிரிழந்தார்.
வேளாங்கண்ணி:

நாகை மாவட்டம் கீழையூர் போலீஸ் சரகம் காமேஸ்வரம் வைரவன் காடு பகுதியை சேர்ந்தவர் பூமாலை. இவருடைய மனைவி தமயந்தி (வயது 36). ஊராட்சி மன்ற உறுப்பினர். இவர் சம்பவத்தன்று தனது வீட்டுக்கு பின்புறம் உள்ள கடலை சாகுபடி செய்யப்பட்ட வயலில் தண்ணீர் பாய்ச்சி கொண்டிருந்தார். 

அப்போது தமயந்தியை பாம்பு கடித்து விட்டது. உடனே அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு நாகை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி தமயந்தி நேற்று பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து கீழையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News