செய்திகள்
தஞ்சையில் ஒரு மையத்தில் மட்டும் கோவேக்சின் 2-வது தவணை தடுப்பூசி இன்று போடப்படுகிறது
தடுப்பூசி போட வருபவர்கள் ஆதார் கார்டு ஜெராக்ஸ் மற்றும் ஏற்கனவே முதல் தவணை தடுப்பூசி போட்டதற்கான ரசீது ஆகியவற்றை கொண்டு வரவேண்டும்.
தஞ்சாவூர்:
தஞ்சை மாநகராட்சி ஆணையர் ஜானகி ரவீந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தஞ்சை மாநகராட்சியில் கோவிஷீல்டு தடுப்பூசி இருப்பு இல்லாததால் தஞ்சை பழைய பஸ் நிலையம் அருகே உள்ள அண்ணா நூற்றாண்டு நினைவு மண்டபத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) தடுப்பூசி போட இயலவில்லை. கோவேக்சின் தடுப்பூசி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருப்பதால் தஞ்சை மேம்பாலம் அருகே உள்ள இந்திய குழந்தைகள் நலச்சங்க இல்லத்தில் இன்று கோவேக்சின் இரண்டாவது தவணை தடுப்பூசி பொது சுகாதாரத் துறையுடன் இணைந்து போடப்படுகிறது. தடுப்பூசி போட வருபவர்கள் ஆதார் கார்டு ஜெராக்ஸ் மற்றும் ஏற்கனவே முதல் தவணை தடுப்பூசி போட்டதற்கான ரசீது ஆகியவற்றை கொண்டு வரவேண்டும். பதிவு செய்யும்போது செல்போன் எண்ணை சரியாக தெரிவிக்க வேண்டும்.
மேற்கண்டவாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தஞ்சை மாநகராட்சி ஆணையர் ஜானகி ரவீந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தஞ்சை மாநகராட்சியில் கோவிஷீல்டு தடுப்பூசி இருப்பு இல்லாததால் தஞ்சை பழைய பஸ் நிலையம் அருகே உள்ள அண்ணா நூற்றாண்டு நினைவு மண்டபத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) தடுப்பூசி போட இயலவில்லை. கோவேக்சின் தடுப்பூசி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருப்பதால் தஞ்சை மேம்பாலம் அருகே உள்ள இந்திய குழந்தைகள் நலச்சங்க இல்லத்தில் இன்று கோவேக்சின் இரண்டாவது தவணை தடுப்பூசி பொது சுகாதாரத் துறையுடன் இணைந்து போடப்படுகிறது. தடுப்பூசி போட வருபவர்கள் ஆதார் கார்டு ஜெராக்ஸ் மற்றும் ஏற்கனவே முதல் தவணை தடுப்பூசி போட்டதற்கான ரசீது ஆகியவற்றை கொண்டு வரவேண்டும். பதிவு செய்யும்போது செல்போன் எண்ணை சரியாக தெரிவிக்க வேண்டும்.
மேற்கண்டவாறு அதில் கூறப்பட்டுள்ளது.