செய்திகள்
புதுக்கடை அருகே மனைவி இறந்த துக்கத்தில் தொழிலாளி தற்கொலை
புதுக்கடை அருகே மனைவி இறந்த சோகத்தில் தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுக்கடை:
புதுக்கடை அருகே கீழ்குளம், ஆவரவிளை பகுதியை சேர்ந்தவர் தங்கராஜ் (வயது 68), கூலி வேலைக்கு சென்று வந்தார். இவருடைய மனைவி 9 மாதங்களுக்கு முன் உடல் நலக்குறைவால் இறந்து விட்டார். இதனால் தங்கராஜ் சோகமாக இருந்து வந்தார்.
இந்தநிலையில் சம்பவத்தன்று தங்கராஜ், மனைவி இறந்த துக்கத்தில் விஷம் குடித்து வீட்டில் மயங்கி கிடந்தார். ஆபத்தான நிலையில் இருந்த அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு தங்கராஜூக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனாலும் பலன் இல்லாமல் தங்கராஜ் பரிதாபமாக இறந்தார்.
இந்த சம்பவம் குறித்து தங்கராஜ் மகள் அஜிதா புதுக்கடை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவகுமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.