செய்திகள்
கோப்புபடம்

பல்லடம் அருகே கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த வாலிபர் கைது

Published On 2021-10-09 09:00 GMT   |   Update On 2021-10-09 09:00 GMT
சங்கரலிங்கம் என்பவர் மீது மற்றொரு தரப்பினர் காரை ஓட்டிச்சென்று மோதியதில் அவர் உயிரிழந்தார்.
பல்லடம்:

பல்லடம் அருகே உள்ள மகாலட்சுமி நகர் டாஸ்மாக் கடை அருகே கடந்த ஆகஸ்ட் 2-ந்தேதி இரு தரப்பினருக்கு இடையே வாய்த்தகராறு ஏற்பட்டு அடிதடி மோதலாக மாறியது. இதில் இரு தரப்பினரும் மாறி, மாறி தாக்கி கொண்டனர். 

இதில் ஒரு தரப்பை சேர்ந்த சங்கரலிங்கம் (வயது 25) என்பவர் மீது மற்றொரு தரப்பினர் காரை ஓட்டிச் சென்று மோதியதில் அவர் உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த பல்லடம் போலீசார் வழக்கில் சம்பந்தப்பட்ட 7 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். 

இந்தநிலையில் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட பல்லடம் ராயபாளையத்தை சேர்ந்த கதிர் என்கிற கதிர்வேல் (30) தலைமறைவாக இருந்து வந்தார்.  

அவரை போலீசார் தேடி வந்த நிலையில், பல்லடம் அருகே மங்கலம் ரோட்டில் அம்மாபாளையம் பிரிவு அருகே மறைந்து இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலையடுத்து அங்கு சென்ற பல்லடம் போலீசார் அவரை சுற்றி வளைத்து கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Tags:    

Similar News