செய்திகள்
கொரோனா

கொரோனா விழிப்புணர்வு ஓவியம்

Published On 2021-06-07 07:15 GMT   |   Update On 2021-06-07 07:15 GMT
திருப்பூரில் கொரோனா விழிப்புணர்வு குறித்து ஓவியர் சங்கத்தினர் பல இடங்களில் ஓவியம் வரைந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்
திருப்பூர்:

திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த ஓவியர் சங்கத்தினர் கடந்தாண்டு கொரோனா தொற்று பரவல் துவங்கிய போது, நகரின் பல்வேறு பகுதிகளில் சாலைகளிலும், சுவர்களிலும் கொரோனா குறித்த விழிப்புணர்வு ஓவியம் வரைந்தனர். இவை பல தரப்பினரின் கவனத்தையும் ஈர்க்கும் வகையில் இருந்தது.

தற்போது கொரோனா இரண்டாவது அலை பரவி வரும் நிலையில் ஓவிய கலைஞர்கள் தொடர்ந்து தங்கள் விழிப்புணர்வு சேவையை துவங்கியுள்ளனர்.பல்வேறு பகுதிகளிலும் கொரோனாவில் இருந்து காத்துக்கொள்ள தடுப்பூசி செலுத்திகொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு ஓவியம் மற்றும் வாசகங்களை இவர்கள் வரைந்து வருகின்றனர்.
Tags:    

Similar News