உள்ளூர் செய்திகள்
கும்பாபிஷேகம் நடைபெற்ற போது எடுத்தபடம்.

ஜடாமுனீவரர் கோவிலில் கும்பாபிஷேகம்

Published On 2022-04-16 09:55 GMT   |   Update On 2022-04-16 09:55 GMT
ஜடாமுனீவரர் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது
புதுக்கோட்டை :

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தாலுகா காரைக்குடி சாலையில் அமைந்து  ஸ்ரீ ஜடாமுனீஸ்வரர் திருக்கோவிலில் திருப்பணிகள் நிறைவு பெற்று கும்பாபிஷேகம் நடத்துவதென முடிவு செய்யப்பட்டது. 

இதற்காக யாகசாலை அமைத்து 14 ந்தேதி கணபதி ஹோமத்துடன் விழா தொடங்கியது.அதனைத் தொடர்ந்து  2 இரண்டுகால யாகபூஜை சிறப்பாக நடைபெற்றது.பல்வேறு பகுதிகளிலிருந்து கொண்டு வரப்பட்டு புனித நீரோடு கடம்புறப்பாடு நிகழ்வு நடை-பெற்றது.

கடம்புறப்பாடானது கோயிலை வலம் வந்து பின்பு கோபுர கலசத்தை அடைந்தது. அதனை தொடர்ந்து சிவாச்-சாரி சிவக்குமார் தலைமையிலான சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கும்பாபிஷேகம் நடைபெற்றது. 

கும்பாபிஷேகத்தைக்கான அப்பகுதியைச்சுற்றியுள்ள பொதுமக்கள் -ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.விழா ஏற்பாட்டினை ஆலய நிர்வாகிகள் ராஜகோபால்,முனி ரெத்தினம் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
Tags:    

Similar News