செய்திகள்
பேர்ஸ்டோவ்

அவுட்டான ஆத்திரத்தில் கத்தியதால் சஸ்பெண்டுக்கான ஒரு புள்ளியை பெற்றார் பேர்ஸ்டோவ்

Published On 2019-11-11 14:08 GMT   |   Update On 2019-11-11 14:08 GMT
நியூசிலாந்துக்கு எதிரான கடைசி டி20 கிரிக்கெட் போட்டியில் ஆட்டமிழந்த ஆத்திரத்தில் கத்தியதால் பெர்ஸ்டோவ்-க்கு தகுதி இழப்பு புள்ளி வழங்கப்பட்டுள்ளது.
நியூசிலாந்து - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5-வது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டி ஆக்லாந்தில் நடைபெற்றது. இங்கிலாந்து அணி பேட்டிங் செய்தபோது, பேர்ஸ்டோவ் 18 பந்தில் 47 ரன்கள் அடித்து நீசம் பந்தில் ஆட்டமிழந்தார்.

ஆட்டமிழந்த ஆத்திரத்தில் கோபமாக கத்தினார். இது ஐசிசி-யின் நன்னடத்தை விதியை மீறிய செயலாகும் என தெரிவித்த ஐசிசி, சஸ்பெண்டுக்கான ஒரு புள்ளியை வழங்கியது. ஏற்கனவே பேர்ஸ்டோவ் இதுபோன்று கடந்த மே மாதம் பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் போட்டியின்போது ஒரு புள்ளி வாங்கியுள்ளார்.

இரண்டு வருட காலத்திற்குள் நான்கு புள்ளிகள் பெற்றால் தானாகவே, சர்வதேச கிரிக்கெட்டில் விளையாட தடைவிதிக்கப்படும்.
Tags:    

Similar News