செய்திகள்
குடும்பத்துடன் மனு கொடுக்க வந்த லட்சுமி.

இடியால் செவித்திறனை இழந்த பெண் - மருத்துவ உதவி கேட்டு மனு

Published On 2021-10-18 10:15 GMT   |   Update On 2021-10-18 10:15 GMT
கடந்த 2ந்தேதி இரவு மழை பெய்த போது லட்சுமி வீட்டின் மேல் இடி மின்னல் தாக்கியது.
திருப்பூர்:

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள மூலனூர் பகுதியை சேர்ந்தவர் பாலன். இவரது மனைவி லட்சும. இவர் திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் ஒரு கோரிக்கை மனு கொடுத்துள்ளார்.
 
அதில் அவர் கூறியிருப்பதாவது:

கடந்த 2ந்தேதி இரவு மழை பெய்த போது எங்கள் வீட்டின் மேல் இடி மின்னல் தாக்கியது. இதில் வீட்டின் சுவர் மற்றும் மேற்கூரை இடிந்து விழுந்ததில் எனக்கும் எனது கணவருக்கும் காயம் ஏற்பட்டது. மேலும் எனது காது கேட்கவில்லை.  

டாக்டரிடம் பரிசோதனை செய்த போது ஆபரேஷன் செய்ய வேண்டும் என்கிறார்கள். மேலும் கணவருக்கு காயம் ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். எங்களது மருத்துவ செலவு, இடிந்த வீட்டை புதுப்பிக்க தேவையான உதவியை செய்து தர வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளார். 
Tags:    

Similar News