ஆன்மிகம்
காணிப்பாக்கம் கோவில் பிரம்மோற்சவம்: யானை வாகனத்தில் விநாயகர் உலா
காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் கோவிலில் உற்சவர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
சித்தூரை அடுத்த காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. விழாவின் 14-வது நாளான நேற்று காலை விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடந்தது. இரவு சூரியபிரபை வாகன வீதிஉலா நடந்தது. அதில் உற்சவர் விநாயகர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதில் பங்கேற்ற பக்தர்கள் கொரோனா விதிமுறைகளை பின்பற்றி சாமி தரிசனம் செய்தனர்.
முன்னதாக நேற்று முன்தினம் விநாயகர் சிறப்பு அலங்காரத்தில் யானை வாகனத்தில் எழுந்தருளி மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். கோவிலில் இன்று (வெள்ளிக்கிழமை) சந்திர பிரபை வாகனத்தில் விநாயகர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
முன்னதாக நேற்று முன்தினம் விநாயகர் சிறப்பு அலங்காரத்தில் யானை வாகனத்தில் எழுந்தருளி மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். கோவிலில் இன்று (வெள்ளிக்கிழமை) சந்திர பிரபை வாகனத்தில் விநாயகர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.