செய்திகள்
கோப்புபடம்

உடுமலையில் சிறுமி பலாத்காரம்-வாலிபர் போக்சோவில் கைது

Published On 2021-09-25 11:32 GMT   |   Update On 2021-09-25 11:32 GMT
சிறுமியின் பெற்றோர் வேலைக்கு சென்றிருந்த நேரத்தில் வீட்டிற்குள் சிவராஜ் சென்றார்.
உடுமலை :

உடுமலை பகுதியை சேர்ந்தவர் சிவராஜ் (வயது 32). இவர் அப்பகுதியை சேர்ந்த  9-ம்வகுப்பு படிக்கும் 14 வயது சிறுமியுடன் நெருங்கி பழகி வந்தார்.

 சம்பவத்தன்று சிறுமியின் பெற்றோர் வேலைக்கு சென்றிருந்த நேரத்தில்  வீட்டிற்குள் புகுந்த சிவராஜ் ஆசைவார்த்தைகளை கூறி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து உடுமலை போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி  போக்சோ சட்டத்தின் கீழ் சிவராஜை கைது செய்தனர்.

Tags:    

Similar News