செய்திகள்
பிரேமலதா விஜயகாந்த்

சசிகலாவுக்கு எனது ஆதரவு எப்போதும் உண்டு- பிரேமலதா விஜயகாந்த்

Published On 2021-01-31 08:27 GMT   |   Update On 2021-01-31 08:27 GMT
கூட்டணி முடிவை தாமதிப்பதில் யாருக்கும் பலனில்லை என தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்
சென்னை:

சென்னையில் தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

* கூட்டணி முடிவை தாமதிப்பதில் யாருக்கும் பலனில்லை. உடனடியாக அதிமுக பேச்சுவார்த்தைக்கு அழைக்க வேண்டும்.

* இந்த நிமிடம் வரை அதிமுக கூட்டணியில் தான் தேமுதிக உள்ளது.
 
* 234 தொகுதிகளிலும் போட்டியிட தேமுதிக தயாராகி வருகிறது.

* கூட்டணி குறித்த இறுதி முடிவை தேமுதிக பொதுக்குழு, செயற்குழு எடுக்கும்.

* ஒரு பெண்ணாக சசிகலாவுக்கு எனது ஆதரவு எப்போதும் உண்டு.

* சசிகலாவை ஆதரிப்பது, அதிமுகவுக்கு எதிரான நிலை என்று பார்க்க கூடாது.

* சசிகலா வருகை அதிமுகவில் தாக்கத்தை ஏற்படுத்துமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

* மூன்றாவது அணி குறித்து இப்போது கருத்து கூறமுடியாது.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News