முக்கிய விரதங்கள்
சிவன் விஷ்ணு

விருப்பங்களை நிறைவேற்றும் மார்கழி மாத பௌர்ணமி விரதம்

Published On 2021-12-18 01:31 GMT   |   Update On 2021-12-18 07:46 GMT
மார்கழி மாதத்தில் வரும் “ பௌர்ணமி” தினத்தின் சிறப்புகளும், இன்று விரதம் இருந்தால் தீரும் பிரச்சனைகளை பற்றியும் அறிந்து கொள்ளலாம்.
புரட்டாசி மாதம் எப்படி பெருமாளின் வழிபாட்டிற்குரிய ஒரு மாதமாக இருக்கிறதோ, அதே போன்று மார்கழி மாதமும் சிவன் மற்றும் விஷ்ணு ஆகிய இரு மூர்த்திகளையும் வழிபடுவதற்குரிய சிறந்த மாதமாக இருக்கிறது. அதிலும் மார்கழி மாதத்தில் வரும் பௌர்ணமி தினத்தில் இந்த இரு தெய்வங்களையும் வழிபடுவதால் சகல நன்மைகளும் உண்டாகும்.

மார்கழி பௌர்ணமியான இன்று அதிகாலை எழுந்து குளித்து முடித்து விட்டு உங்கள் விருப்பத்தை பொறுத்து சிவன் கோவிலுக்கோ அல்லது விஷ்ணு கோவிலுக்கோ சென்று வழிபட வேண்டும். இன்று விரதமிருக்க விரும்புபவர்கள் சாப்பிடாமல் இருப்பதை காட்டிலும் மூன்று வேளையும் பால், பழங்கள் சாப்பிட்டு விரதமிருக்கலாம். மாலையிலும் சிவன் அல்லது விஷ்ணு கோவிலுக்கு சென்று வழிபட வேண்டும். பொதுவாக மார்கழி பௌர்ணமி தினத்தில் காலையில் சிவன் கோவிலுக்கு சென்று வழிபட்டவர்கள், மாலை பெருமாள் கோவிலுக்கு சென்று வழிபடுவதும், காலையில் பெருமாள் கோவிலுக்கு சென்று வழிபட்டவர்கள் மாலையில் சிவன் கோவிலுக்கு சென்று வழிபடுவதும் சாலாச் சிறந்ததாகும்.

மார்கழி பௌர்ணமி தினத்தில் இந்த முறையில் வழிபடுபவர்களுக்கு உடல், மனம், ஆன்மாவினால் செய்த பாவங்கள் இறைவனின் அருளால் நீங்கும். மனோதிடம் பெருகும். மனதில் சிறந்த சிந்தனைகளும், எண்ணங்களும் எப்போதும் தோன்றும். பெருமாளின் அருட்கடாட்சம் கிடைத்து வீட்டில் வளங்கள் பெருகும். மனதில் இருக்கின்ற பயங்கள், கவலைகள் போன்றவை நீங்கும். உங்களின் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும்.
Tags:    

Similar News