செய்திகள்
முதல் மந்திரி கொரோனாவுடன் போராட வேண்டும், கங்கனாவுடன் அல்ல - பட்னாவிஸ் குற்றச்சாட்டு
மகாராஷ்டிரா முதல் மந்திரி உத்தவ் தாக்கரே கொரோனா வைரசுடன் போராடுவதற்கு பதிலாக கங்கனா மற்றும் எதிர்க்கட்சிகளுடன் போராடி வருகிறார் என குற்றம் சாட்டியுள்ளார்.
மும்பை:
இந்தியாவில் கொரோனா வைரசின் தாக்கம் தீவிரமடைந்து வருகிறது. நாட்டிலேயே வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை மற்றும் பலி எண்ணிக்கையில் மகாராஷ்டிர மாநிலம் முதலிடத்தில் உள்ளது.
அம்மாநிலத்தில் கடந்த சில வாரங்களாக வைரஸ் பரவும் வேகம் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
இந்நிலையில், முதல் மந்திரி உத்தவ் தாக்கரே கொரோனா வைரசுடன் போராடுவதற்கு பதில் கங்கனா மற்றும் எதிர்க்கட்சிகளுடன் போராடி வருகிறார் என குற்றம் சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய பாஜக தலைவர் தேவேந்திர பாட்னாவிஸ், தற்போதைய நிலவரப்படி மகாராஷ்டிராவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை10 லட்சத்தை கடந்துள்ளது. நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கையில் 40 சதவீதம் மகாராஷ்டிராவில் உள்ளது.
முதலில் நமது முதல் மந்திரி கொரோனா வைரசை எதிர்த்துப் போராட வேண்டும். ஆனால் அவர் எதிர்க்கட்சிகள் மற்றும் கங்கனாவை எதிர்த்து போராடுகிறார் என குற்றம் சாட்டினார்.