உள்ளூர் செய்திகள்
வலையில் சிக்கிய மத்தி மீன்களை பிரித்து வைக்கும் மீனவர்கள்.

மத்தி மீன்களின் வரத்து அதிகரிப்பு

Published On 2022-04-16 09:41 GMT   |   Update On 2022-04-16 09:41 GMT
நாகை மாவட்டத்தில் மத்தி மீன்களின் வரத்து அதிகரித்துள்ளது.
நாகப்பட்டினம்

தமிழக கடலோர பகுதிகளில் அதிகளவு கிடைக்கும்  மத்தி மீன், கேரள மாநிலத்-திற்கு பெரும் அளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது. உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியமாகதேவைப்படும்

புரதச்சத்து நிறைந்த மத்தி மீனை விரும்பி சாப்பி-டுபவர்கள் அதிகம். மீன்பிடி தடைக்காலம் தொடங்கிய நிலையில் கடலுக்கு மீன்பிடிக்க செல்லும் பைபர் படகு மீனவர்களின் வலைகளில் அதிக

அளவிலான மத்தி மீன்கள் பிடிபட்டுள்ளது. நாகை, நாகூர், சாமந்தான் பேட்டை, செருதூர், கல்லாறு, உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு மீனவ கிராமங்-களில் இருந்து மீன் பிடிக்க சென்ற பைபர் படகு

மீனவர்களுக்கு மத்தி மீன் வரத்து அதிகரித்துள்ளது. ஆனால், மீன்களின் வரத்து அதிகமாக இருந்தாலும், மீன்களின் விலை கடுமை-யாக குறைந்துள்ளதாக மீனவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் இருந்து அதிக அளவு மத்தி மீன்கள் ஏற்றுமதி செய்யப்படும் கேரளாவிலும் மத்தி மீன்க--ளின் வரத்து அதிகமானதால்  தமிழகத்தில் விலை சரிந்துள்ளதாக தெரிவித்துள்ள மீனவர்கள்

கிலோ ரூ.100 ரூபாய் முதல் 130 வரை விற்பனை செய்யப்பட்டு வந்த மத்தி மீன்களின் விலை தற்போது ஒரு கிலோ வெறும் ரூ.35 முதல் 45 வரை மட்டுமே விலை போவதாக கூறினார்கள்.

5 மாதங்களுக்கு பிறகு நாகை மாவட்டத்தில் பல்வேறு மீனவ கிராமங்களில் பிடித்து வரப்பட்ட மத்தி மீன்கள் ஐஸ் வைத்து கேரளா மாநிலத்திற்கு ஏற்-றுமதி செய்யப்படும் பணிகள் தீவிரமாக

நடைபெற்று வருகிறது. பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலை உயர்வால், கடும் நெருக்கடியில் சூழ்ந்து இருப்பதாக  தெரிவித்துள்ள மீனவர்கள், மத்தி மீன்களின் விலை குறைவால்

எரிபொருள், ஐஸ், ஆட்கள் கூலி உள்ளிட்ட செலவு செய்த தொகை கூட மிஞ்சவில்லை என்று வேதனை தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News