செய்திகள்
குசால் பெரேரா

இலங்கை வீரர்கள் ஐபிஎல் கிரிக்கெட்டில் விளையாட சிறந்த வாய்ப்பு

Published On 2021-06-27 10:42 GMT   |   Update On 2021-06-27 10:42 GMT
ஐபிஎல் 2021 2-ம் பகுதியில் பெரும்பாலான வெளிநாட்டு வீரர்கள் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ள நிலையில், இலங்கை வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் ஐபிஎல் 2021 சீசன் நடைபெற்றது. சுமார் ஒருமாத ஆட்டத்திற்குப்பின் வீரர்களை கொரோனா வைரஸ் தொற்று தாக்கியதால், போட்டி ரத்து செய்யப்பட்டு ஒத்திவைக்கப்பட்டது.

மீதமுள்ள போட்டிகள் செப்டம்பர்- அக்டோபரில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற இருக்கிறது. சர்வதேச போட்டிகள் மற்றும் கொரோனா வைரஸ் தொற்று, உலக கோப்பைக்கு தயாராகுதல் போன்ற காரணத்தினால் வெளிநாட்டைச் சேர்ந்த சில வீரர்கள் கலந்து கொள்ள வாய்ப்பில்லை எனக் கூறப்படுகிறது.

இதற்கிடையில் இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் போட்டி தொடர் ஜூலை 13-ந்தேதி தொடங்குகிறது. இந்தத் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினால், இலங்கை வீரர்கள் சில ஐபிஎல் கிரிக்கெட்டில் மாற்று வீரராக தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளது.



இலங்கை வீரர்கள் சமீப ஆண்டுகளாக ஐபிஎல் கிரிக்கெட்டில் மிகப்பெரிய அளவில் பங்கேற்கவில்லை. கடந்த ஆண்டு வேகப்பந்து வீச்சாளர் உதானா இடம் பிடித்திருந்தார். சிறப்பாக பந்து வீசினாலும், ரன்கள் அதிக அளவில் விட்டுக்கொடுத்தார்

இந்த வருடம் நடைபெற்ற முதல் பகுதி ஆட்டத்தில் இலங்கையை சேர்ந்த ஒரு வீரர்கள் கூட இடம் பெறவில்லை. இடது கை பேட்ஸ்மேன் குசால் பெரேரா, தனுஷ்கா குணதிலகா, வனிந்து ஹசரங்கா, துஷ்மந்தா சமீரா ஆகியோர் இடம் பிடிக்க வாய்ப்புள்ளது.
Tags:    

Similar News