செய்திகள்
கொரோனா வைரஸ்

நாமக்கல் மாவட்டத்தில் ஒரே நாளில் பெண் டாக்டர் உள்பட 352 பேருக்கு கொரோனா பாதிப்பு

Published On 2021-05-11 13:02 GMT   |   Update On 2021-05-11 13:02 GMT
நாமக்கல் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் பெண் டாக்டர் உள்பட 352 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் மாவட்டத்தில் இதுவரை பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 19 ஆயிரத்தை தாண்டிஉள்ளது.
நாமக்கல்:

தமிழக சுகாதாரத்துறை அறிவிப்பின்படி நேற்று முன்தினம் வரை நாமக்கல் மாவட்டத்தில் 18 ஆயிரத்து 811 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இதற்கிடையே பிற மாவட்டத்தில் சிகிச்சை பெற்று வந்த 23 பேரின் பெயர் நாமக்கல் மாவட்ட பட்டியலுடன் இணைக்கப்பட்டது. இதனால் நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 18 ஆயிரத்து 834 ஆக அதிகரித்தது.

இதற்கிடையே நேற்று ஒரே நாளில் ஆரம்ப சுகாதார நிலைய பெண் டாக்டர் உள்பட 352 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. இதனால் நாமக்கல் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 19,186 ஆக உயர்ந்து உள்ளது.

இந்த நிலையில் நேற்று நாமக்கல் மாவட்டத்தில் 408 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பினர். இதுவரை 17 ஆயிரத்து 149 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர். 137 பேர் இறந்து விட்ட நிலையில், 1,900 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், பொதுமக்கள் முககவசம் அணியாமல் வெளியே செல்லக்கூடாது எனவும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் எனவும் சுகாதாரத்துறையினர் அறிவுறுத்திவருகின்றனர்.
Tags:    

Similar News