செய்திகள்
விபத்து

சென்னையில் ஒரேநாளில் விபத்தில் சிக்கி 4 பேர் பலி

Published On 2019-11-26 09:53 GMT   |   Update On 2019-11-26 09:53 GMT
சென்னையில் ஒரேநாளில் விபத்தில் சிக்கி 4 பேர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

போரூர்:

வடபழனி பஜனை கோவில் தெருவைச் சேர்ந்தவர் இளங்கோ (வயது 50) ஆட்டோ டிரைவர்.

இன்று அதிகாலை 3 மணி அளவில் அவர் அசோக்நகர் 2-வது அவென்யூவில்இருந்து அருணாசலம் என்பவரை ஆட்டோவில் சவாரி ஏற்றிக் கொண்டு கே.கே.நகர் நோக்கி சென்று கொண்டிருந்தார்.

100 அடி சாலை சந்திப்பு சிக்னலில் சாலையை கடக்க முயன்ற போது கோயம்பேடு நோக்கி சென்ற கண்டெய்னர் லாரி திடீரென ஆட்டோ மீது மோதியது.

இதில் ஆட்டோ நசுங்கியது. சம்பவ இடத்திலேயே டிரைவர் இளங்கோ உடல் நசுங்கிபரிதாபமாக உயிரிழந்தார். பயணி அருணாசலம் பலத்த காயங்களுடன் ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து தொடர்பாக கண்டெய்னர் லாரி டிரைவரான உத்திரமேரூரை சேர்ந்த தீனதயாளன் என்பவரை கிண்டி போக்கு வரத்து போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோல் நசரத்பேட்டையில் சாலையை கடக்க முயன்ற போது தனியார் பஸ் மோதி தர்மபுரியை சேர்ந்த முனிராஜ் ராஜப்பா (65) உயிரிழந்தார்.

வண்ணாரப்பேட்டையில் சாலையை கடக்க முயன்ற முதியவர் அருள் (69) என்பவர் ஆட்டோ மோதி பலியானார்.

இந்திரா நகர் ரெயில் நிலையம் அருகே முன்னால் சென்ற கார் மீது ரஞ்சித் (21) என்பவர் ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த ரஞ்சித் பரிதாபமாக இறந்தார்.

Tags:    

Similar News