உள்ளூர் செய்திகள்
கைது

ரோந்து பணியிலிருந்த காவலரிடம் தகராறு செய்து தாக்கிய ஆட்டோ ஓட்டுநர் கைது

Published On 2022-04-16 11:17 GMT   |   Update On 2022-04-16 11:17 GMT
சென்னை கோட்டூர்புரம் பகுதியில் ரோந்து பணியிலிருந்த காவலரிடம் தகராறு செய்து தாக்கிய ஆட்டோ ஓட்டுநர் கைது செய்யப்பட்டார்.
சென்னை:

ஜெ-4 கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர் சரண்ராஜ் என்பவர் நேற்று இரவு கோட்டூர்புரம், சித்ரா நகர் முத்து மாரியம்மன் கோயில் தெருவில் கண்காணிப்பு பணியிலிருந்த போது, அங்கு பெண் ஒருவரிடம் தகராறு செய்து கொண்டிருந்த ஆட்டோ ஓட்டுநரை சத்தம் போட்டு தட்டிக்கேட்ட போது, ஆட்டோ ஓட்டுநர் காவலர் சரண்ராஜை பணி செய்யவிடாமல் தடுத்து, தகராறு செய்து கையால் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பியுள்ளார்.

இது குறித்து காவலர் சரண்ராஜ் ஜெ-4  கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்யப்பட்டது. ஜெ-4 கோட்டூர்புரம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல்
குழுவினர் தீவிர விசாரணை செய்து வழக்கில் சம்பந்தப்பட்ட ஆட்டோ ஓட்டுநர் ஐயப்பனை கைது செய்தனர்.
Tags:    

Similar News