ஆன்மிகம்
பட்டுக்குடி ஏகவுரியம்மன் கோவில் திருவிழா

பட்டுக்குடி ஏகவுரியம்மன் கோவில் திருவிழா

Published On 2021-02-16 04:15 GMT   |   Update On 2021-02-16 04:15 GMT
அய்யம்பேட்டை பட்டுக்குடி கிராமத்தில் உள்ள ஏகவுரியம்மன் கோவிலில் திருவிழா விழாவையொட்டி சாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது.
அய்யம்பேட்டை அருகே கோவிந்தநாட்டுச்சேரி ஊராட்சி பட்டுக்குடி கிராமத்தில் உள்ள ஏகவுரியம்மன் கோவிலில் திருவிழா நடைபெற்றது. விழாவையொட்டி சாமிக்கு சிறப்பு அபிசேகம், அலங்காரம் நடைபெற்றது.

தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் சாமி வீதியுலா நடைபெற்றது. பின்னர் செங்கமலை ஆண்டவருக்கு சிறப்பு அபிசேகம், ஆராதனை நடைபெற்றது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

விழாவில் நாதஸ்வர இன்னிசை நிகழ்ச்சியும், தப்பாட்டம் கலை நிகழ்ச்சியும் நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை கிராம நாட்டாண்மைகள் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.
Tags:    

Similar News