ஆன்மிகம்
புரட்டாசி மாத பிரதோஷம்: சிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடு
புரட்டாசி மாத பிரதோஷத்தை முன்னிட்டு அனைத்து சிவன் கோவில்களிலும் சிறப்பு அபிஷேகமும், வழிபாடும் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
சிவராத்திரியையொட்டி குமரி மாவட்டத்தில் நடைபெறும் சிவாலய ஓட்டம் மிகவும் பிரசித்தி பெற்றவையாகும். இதில் தமிழகம் மட்டுமின்றி கேரளாவை சேர்ந்த ஏராளமான சிவ பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.
வளர்பிறை பிரதோஷத்தையொட்டி நேற்று சிவாலய ஓட்டம் தொடர்புடைய 12 சிவாலயங்களான திக்குறிச்சி, திற்பரப்பு, திருமல போன்ற கோவில்களிலும், மார்த்தாண்டம் கோதேஷ்வரம் கோவில், குழித்துறை மகாதேவர் கோவில் உள்பட மாவட்டம் முழுவதும் உள்ள சிவாலயங்களில் நந்தி மற்றும் சிவனுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடைபெற்றது.
திக்குறிச்சி மகாதேவர் கோவிலில் நடந்த பூஜையில் தமிழகம் மற்றும் கேரளாவை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
வளர்பிறை பிரதோஷத்தையொட்டி நேற்று சிவாலய ஓட்டம் தொடர்புடைய 12 சிவாலயங்களான திக்குறிச்சி, திற்பரப்பு, திருமல போன்ற கோவில்களிலும், மார்த்தாண்டம் கோதேஷ்வரம் கோவில், குழித்துறை மகாதேவர் கோவில் உள்பட மாவட்டம் முழுவதும் உள்ள சிவாலயங்களில் நந்தி மற்றும் சிவனுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடைபெற்றது.
திக்குறிச்சி மகாதேவர் கோவிலில் நடந்த பூஜையில் தமிழகம் மற்றும் கேரளாவை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.