செய்திகள்
கோப்புபடம்

சங்கராபுரம் அருகே சாராயம் விற்ற 2 பேர் கைது

Published On 2021-01-05 15:27 GMT   |   Update On 2021-01-05 15:27 GMT
சங்கராபுரம் அருகே சாராயம் விற்ற 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சங்கராபுரம்:

சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சவுக்கத்அலி தலைமையிலான போலீசார் புதுப்பாலப்பட்டு பகுதியில் தீவிர ரோந்து பணி மேற்கொண்டனர். 

அப்போது அதே ஊரில் வீட்டின் பின்புறம் சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்த கிருஷ்ணமூர்த்தி(வயது 60), பூபதி(50) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும் இவர்களிடம் இருந்து தலா 55 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.
Tags:    

Similar News