ஆன்மிகம்
அய்யா வைகுண்ட சிவபதி தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
வரதய்யங்கார்பாளையத்தில் அய்யா வைகுண்டசிவபதிதேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
கோவை சரவணம்பட்டியை அடுத்த வரதய்யங்கார் பாளையத்தில் உள்ள அய்யா வைகுண்ட சிவபதி கோவில் தேர்த்திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதேபோன்று இந்த ஆண்டும் தேர்த்திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதையொட்டி காலை6 மணிக்கு நாதஸ்வரம், செண்டை மேளம் முழங்கசிறப்பு பூஜைகளுடன் கொடியேற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து காலை 8 மணிக்கு அன்னதானமும், பிற்பகல் 12 மணிக்குஉச்சிப்படிப்பும், பணிவிடையும், இரவு 7.30 மணிக்கு அய்யா தொட்டில் வாகனத்தில் பதிவலமும் நடைபெற்றது.
24-ந்தேதி அய்யாவைகுண்டர்பூஞ்சப்பரவாகனத்தில் வலம் வருதல், 25-ந்தேதி சர்ப்பவாகனத்திலும், 26-ந்தேதி கருடவாகனத்திலும், 27-ந்தேதிவெள்ளை குதிரைவாகனத்திலும், 28-ந்தேதி ஆஞ்சநேயர் வாகனத்திலும், 29-ந்தேதி இந்திர வாகனத்திலும், 30-ந்தேதி காளைவாகனத்தில் அம்மையப்பராக எழுந்தருள செய்து திருவிழா நடைபெறுகிறது.
விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் அய்யாவைகுண்டசிவபதிகோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.
இதையொட்டி காலை6 மணிக்கு நாதஸ்வரம், செண்டை மேளம் முழங்கசிறப்பு பூஜைகளுடன் கொடியேற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து காலை 8 மணிக்கு அன்னதானமும், பிற்பகல் 12 மணிக்குஉச்சிப்படிப்பும், பணிவிடையும், இரவு 7.30 மணிக்கு அய்யா தொட்டில் வாகனத்தில் பதிவலமும் நடைபெற்றது.
இன்று (சனிக்கிழமை) காலை 6 மணிக்கு உகப்படிப்பும், பணிவிடையும், இரவு 7.30 மணிக்கு மயில் வாகனத்தில் எழுந்தருளல் நிகழ்ச்சியும், 22-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை)காலை பணிவிடை,உச்சிபடிப்பு, அய்யா வைகுண்டர் பிரம்மனாக வெளிப்பட்டு சரஸ்வதி தேவியுடன் அன்ன வாகனத்தில் வருதல் நிகழ்ச்சியும், 23-ந்தேதிஅய்யா தொட்டில் வாகனத்தில் வீதிவலம் வருதல் நிகழ்ச்சி உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.
24-ந்தேதி அய்யாவைகுண்டர்பூஞ்சப்பரவாகனத்தில் வலம் வருதல், 25-ந்தேதி சர்ப்பவாகனத்திலும், 26-ந்தேதி கருடவாகனத்திலும், 27-ந்தேதிவெள்ளை குதிரைவாகனத்திலும், 28-ந்தேதி ஆஞ்சநேயர் வாகனத்திலும், 29-ந்தேதி இந்திர வாகனத்திலும், 30-ந்தேதி காளைவாகனத்தில் அம்மையப்பராக எழுந்தருள செய்து திருவிழா நடைபெறுகிறது.
விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் அய்யாவைகுண்டசிவபதிகோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.