ஆன்மிகம்
பிரத்யங்கிரா தேவி கோவிலில் யாகம் நடந்தது

திருவிசநல்லூர் பிரத்யங்கிரா தேவி கோவிலில் 1008 லட்டு யாகம் நடந்தது

Published On 2021-11-05 04:30 GMT   |   Update On 2021-11-05 04:30 GMT
திருவிசநல்லூர் பிரத்யங்கிரா தேவி கோவிலில் அமாவாசையை முன்னிட்டு 1008 லட்டு யாகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
கும்பகோணம் அருகே உள்ள திருவிசநல்லூர் கிராமத்தில் 12 அடி உயரத்தில் பஞ்சமுக மகா மங்கள பிரத்யங்கிரா தேவி அருள்பாலிக்கிறார். இங்கு அமாவாசை நாட்களில் நிகும்பலா யாகம், மிளகாய் யாகம் நடைபெறுவது வழக்கம். நேற்று (வியாழக்கிழமை) தீபாவளியை முன்னிட்டு 1008 லட்டு யாகம் நடந்தது.

யாகத்தில் பல்வேறு விதமான இனிப்பு பலகாரங்கள் போடப்பட்டது. பூஜைகளை கணேஷ்குமார் குருக்கள் தலைமையில் 10-க்கும் மேற்பட்ட சிவாச்சாரியார்கள் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகி நந்தினி கணேஷ்குமார் குருக்கள், கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.
Tags:    

Similar News