ஆன்மிகம்
திருச்சி சிலோன் காலனியில் உள்ள ஆயிமகமாயி அம்மன் கோவிலில் மகா சண்டி ஹோமம்
திருச்சி எடமலைப்பட்டிபுதூர் சிலோன் காலனியில் ஆயிமகமாயி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் 2 நாட்களாக மகா சண்டி ஹோமம் நடத்தப்பட்டது.
திருச்சி எடமலைப்பட்டிபுதூர் சிலோன் காலனியில் ஆயிமகமாயி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் 2 நாட்களாக மகா சண்டி ஹோமம் நடத்தப்பட்டது. கோவில் முன்பு யாகசாலை அமைத்து பல்வேறு நவதானியங்கள் போடப்பட்டு சண்டி ஹோமம் நடத்தப்பட்டது.
வேதவிற்பன்னர்கள் பாராயணம் பாடினர். சண்டி ஹோமத்தால் நம்மை சூழ்ந்திருக்கும் தீமைகளை களைந்து, நம்பிக்கையை உருவாக்கிட வல்லது என்றும், திருஷ்டி மற்றும் தோஷங்களை நீக்க வல்லது என்றும், இப்பிறவி, முற்பிறவியில் ஏற்பட்ட சாபங்களை களைவதற்கும் சண்டிஹோமம் வரப்பிரசாதமாக அமையும் என்று கோவில் அர்ச்சகர் தெரிவித்தார். இந்த ஹோமத்தில் தம்பதிகளாகவும், சிலர் குடும்பத்துடனும் பங்கேற்றனர்.
வேதவிற்பன்னர்கள் பாராயணம் பாடினர். சண்டி ஹோமத்தால் நம்மை சூழ்ந்திருக்கும் தீமைகளை களைந்து, நம்பிக்கையை உருவாக்கிட வல்லது என்றும், திருஷ்டி மற்றும் தோஷங்களை நீக்க வல்லது என்றும், இப்பிறவி, முற்பிறவியில் ஏற்பட்ட சாபங்களை களைவதற்கும் சண்டிஹோமம் வரப்பிரசாதமாக அமையும் என்று கோவில் அர்ச்சகர் தெரிவித்தார். இந்த ஹோமத்தில் தம்பதிகளாகவும், சிலர் குடும்பத்துடனும் பங்கேற்றனர்.