தொழில்நுட்பம்
கேலக்ஸி நோட் 10

கொரோனா காரணமாக சாம்சங், ஒப்போ, விவோ ஸ்மார்ட்போன் உற்பத்தி பாதிப்பு

Published On 2020-03-24 09:07 GMT   |   Update On 2020-03-24 09:09 GMT
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சாம்சங், ஒப்போ, விவோ போன்ற ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் உற்பத்தியை தற்காலிகமாக நிறுத்துவதாக அறிவித்து இருக்கின்றன.



ஸ்மார்ட்போன் உற்பத்தியாளர்களான சாம்சங், ஒப்போ மற்றும் விவோ போன்ற நிறுவனங்கள் இந்தியாவில் மொபைல் போன் உற்பத்தியை நிறுத்துவதாக தெரிவித்துள்ளன. கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக நாடுமுழுக்க மக்கள் வெளியில் வர கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து உற்பத்தி நிறுத்தம் பற்றிய அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

அடுத்த அறிவிப்பு வரும் வரை சாம்சங் நிறுவன ஆலைகளில் உற்பத்தி பணிகள் துவங்காது என சாம்சங் செய்தி தொடர்பாளர் தெரிவித்து இருக்கிறார். 



சாம்சங்கை பொருத்தவரை ஊழியர்களின் பாதுகாப்பிற்கே முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. ஊழியர்களின் நலம் கருதியும், அவர்களது குடும்பத்தார் கொரோனா மூலம் பாதிக்கப்படாமல் இருக்கவும், அரசு வழிமுறைகளை பின்பற்றும் விதமாக நொய்டா ஆலையின் உற்பத்தி பணிகளை நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. என அவர் மேலும் தெரிவித்தார்.  

சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான விவோ ஃபேக்ட்ரியில் பணியாற்றாத ஊழியர்களை வீட்டில் இருந்தே பணியாற்ற கேட்டுக் கொண்டுள்ளது. இதுதவிர எரிக்சன் மற்றும் நொய்டா போன்க நிறுவனங்களில் சமூக இடைவெளி அடிப்படையில் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக தெரிகிறது.
Tags:    

Similar News