உள்ளூர் செய்திகள்
விருதுநகர் மாவட்டத்தில் தொழிலாளர்களுக்கு இணையதளம் மூலம் புதிய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
விருதுநகர்
தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நலவாரியம் தமிழ்நாடு உடலுழைப்பு தொழிலாளர் நலவாரியம் முதலான 12 அமைப்புசாரா தொழிலாளர்கள் நலவாரியங்களில் 60வயது முடிவடைந்த உறுப்பினர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது.
மேற்படி நபர்கள் தொடர்ந்து ஓய்வூதியம் பெற ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் தொழிலாளர் உதவி ஆணையர் சமூக பாதுகாப்பு திட்ட அலுவலகத்திற்கு வருகை தந்து ஆயுள் சான்று சமர்ப்பித்து வருகின்றனர் இதனால் ஓய்வூதியர்களின் சிரமத்தை தவிர்க்கும் பொருட்டு அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியங்கள் இணையதளத்தில் இணையதள முகவரி மூலம் ஓய்வூதியர்கள் ஆயுள்சான்று சமர்ப் பிக்கவசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இணையதளம் தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நலவாரியம் முதலான 18அமைப்புசாரா தொழிலாளர் நலவாரியங்களில் தொழிலாளர் உதவி ஆணையர் சமூக பாதுகாப்பு திட்டம் அலுவலகத்தில் மூலம் ஏற்கனவே மாதாந்திர ஓய்வூதியம் பெறுபவர்கள் இணையதளத்தில் ஆயுள்சான்று சமர்ப்பிக்கலாம்.
மேலும் மேற்படி இணைய தளத்தில் சொந்தமாக வீடுகட்ட, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விடம் மேம்பாட்டு வாரியத்தில் ஏற்கனவே கட்டப்பட்டு உள்ள குடியிருப்புகளில் ஒதுக்கீடு பெற, பதிவுபெற்ற கட்டுமான தொழிலாளர்களுக்கு ரூ.4 லட்சம் வரை நிதி உதவி பெற விண்ணப்பிக்க வசதி செய்யப்பட்டு உள்ளது.
எனவே பதிவு பெற்ற கட்டுமான தொழிலாளர்கள் இணையதளம் மூலம் விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மேற்கண்ட தகவலை தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) காளிதாஸ் தெரிவித் துள்ளார்.