ஆன்மிகம்
வரதராஜ பெருமாள்

வில்லியனூர் வரதராஜ பெருமாள் கோவிலுக்கு தங்கத் தேர் செய்யும் பணி தொடக்கம்

Published On 2020-12-10 06:09 GMT   |   Update On 2020-12-10 06:09 GMT
வில்லியனூரில் பிரசித்திப்பெற்ற தென்கலை வரதராஜ பெருமாள் கோவிலில் தேர் செய்யும் பணி இன்று (வியாழக்கிழமை) சிறப்பு பூஜைகள் செய்து தொடங்கப்படுகிறது.
வில்லியனூரில் பிரசித்திப்பெற்ற தென்கலை வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. இங்கு கோவில் திருவிழாக் காலங்களில் உள்பிரகாரத்தில் வலம்வரும் வகையில் தங்கத்தேர் செய்ய கோவில் நிர்வாகம் முடிவு செய்தது. இதையடுத்து தேர் செய்யும் பணி இன்று (வியாழக்கிழமை) காலை 10.30 மணிக்கு சிறப்பு பூஜைகள் செய்து தொடங்கப்படுகிறது.

தொகுதி எம்.எல்.ஏ.வும், பொதுப் பணித்துறை அமைச்சருமான நமச்சிவாயம் தேர் செய்யும் பணியை தொடங்கி வைக்கிறார். 75-வது பட்டம் வர்தமான் சீனிவாச ராமானுஜ ஆச்சாரியார் சுவாமிகள் கலந்துகொண்டு மங்களா சாசனம் செய்துவைக்கிறார். இதற்கான ஏற்பாடுகளை அத்தியூரான் சாரிட்டபிள் டிரஸ்ட் மூலம் கோவில் சிறப்பு அதிகாரி, அர்ச்சகர்கள் செய்து வருகின்றனர்.
Tags:    

Similar News