ஆன்மிகம்
கும்பகோணம் மகாமக குளம்

மாசிமக தீர்த்தவாரியின் போது கும்பகோணம் மகாமக குளத்தில் பக்தர்கள் நீராட தடை

Published On 2021-02-26 04:22 GMT   |   Update On 2021-02-26 04:22 GMT
மாசிமக தீர்த்தவாரியின் போது கும்பகோணம் மகாமக குளத்தில் பக்தர்கள் நீராட தடை விதிக்கப்பட்டுள்ளது என்று தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தேஷ்முக் சேகர் சஞ்சய் தெரிவித்தார்.
கும்பகோணம் :

தஞ்சை மாவட்டம், கும்பகோணத்தில் மாசிமக விழாவையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தேஷ்முக் சேகர் சஞ்சய் மகாமக குளக்கரையில் ஆய்வு செய்தார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

மாசிமக விழாவுக்கு வரும் பக்தர்களுக்கு பாதுகாப்பு அளிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. மகாமக குளம் அருகே வாகனங்கள் செல்ல முடியாத வகையில் தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டு ஆறு இடங்களில் வாகனங்கள் நிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குளக்கரையில் நவீன கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. 32 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் பக்தர்களின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு ஒலிபெருக்கி மூலம் தகவல்களை தெரிவிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் காரணமாக மகாமககுளத்தில் பக்தர்கள் புனித நீராட தடை விதிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News