செய்திகள்
முத்துப்பேட்டை அருகே மின்சாரம் தாக்கி முதியவர் பலி
முத்துப்பேட்டை அருகே மின்சாரம் தாக்கி முதியவர் பலியாகினார். மேலும் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் படுகாயமடைந்தனர்.
முத்துப்பேட்டை:
முத்துப்பேட்டையை அடுத்த இடும்பாவனம் ஊராட்சி-வேதாரண்யம் சாலையோரம் உள்ளது. இங்கு நரிக்குறவர்கள் மற்றும் மாற்று சமூகத்தை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டவர்களின் குடிசை வீடுகள் உள்ளன. இந்தநிலையில் சம்பவத்தன்று இரவு நரிக்குறவர்கள் சிலர் மைக்செட் கட்டி கிடா வெட்டி, மாவிளக்கு போட்டு குலதெய்வ வழிபாடு நடத்தியுள்ளனர்.
இதில் சில டியூப் லைட்டுகள் அருகே உள்ள இடத்தின் கம்பி வேலியில் கட்டப்பட்டிருந்தன. இதில் டியூப்கள் மட்டும் கழற்றப்பட்ட நிலையில் ஒயர் இணைப்பு வேலியிலேயே இருந்துள்ளது.
இதன் வழியாக கம்பிவேலியில் மின்சாரம் பாய்ந்து கொண்டிருந்தது. இந்தநிலையில் நரிக்குறவர் தனபால் (வயது60) என்பவர் கம்பிவேலியை எதிர்பாராதவிதமாக தொட்டுள்ளார். இதில் மின்சாரம் தாக்கி அவர் தூக்கிவீசப்பட்டார். அப்போது அருகில் உள்ள வீடுகளிலும் திடீரென மின்கசிவு ஏற்பட்டு ஒரே குடும்பத்தை சேர்ந்த வேதநாயகி (7), மாரியம்மாள் (35), வீரம்மாள் (50), செல்லம்மாள் (60) ஆகிய 4 பேரும் மின்சாரம் தாக்கி படுகாயம் காயமடைந்தனர். இதையடுத்து அனைவரையும் திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி தனபால் இறந்தார். மற்ற 4 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து முத்துப்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முத்துப்பேட்டையை அடுத்த இடும்பாவனம் ஊராட்சி-வேதாரண்யம் சாலையோரம் உள்ளது. இங்கு நரிக்குறவர்கள் மற்றும் மாற்று சமூகத்தை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டவர்களின் குடிசை வீடுகள் உள்ளன. இந்தநிலையில் சம்பவத்தன்று இரவு நரிக்குறவர்கள் சிலர் மைக்செட் கட்டி கிடா வெட்டி, மாவிளக்கு போட்டு குலதெய்வ வழிபாடு நடத்தியுள்ளனர்.
இதில் சில டியூப் லைட்டுகள் அருகே உள்ள இடத்தின் கம்பி வேலியில் கட்டப்பட்டிருந்தன. இதில் டியூப்கள் மட்டும் கழற்றப்பட்ட நிலையில் ஒயர் இணைப்பு வேலியிலேயே இருந்துள்ளது.
இதன் வழியாக கம்பிவேலியில் மின்சாரம் பாய்ந்து கொண்டிருந்தது. இந்தநிலையில் நரிக்குறவர் தனபால் (வயது60) என்பவர் கம்பிவேலியை எதிர்பாராதவிதமாக தொட்டுள்ளார். இதில் மின்சாரம் தாக்கி அவர் தூக்கிவீசப்பட்டார். அப்போது அருகில் உள்ள வீடுகளிலும் திடீரென மின்கசிவு ஏற்பட்டு ஒரே குடும்பத்தை சேர்ந்த வேதநாயகி (7), மாரியம்மாள் (35), வீரம்மாள் (50), செல்லம்மாள் (60) ஆகிய 4 பேரும் மின்சாரம் தாக்கி படுகாயம் காயமடைந்தனர். இதையடுத்து அனைவரையும் திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி தனபால் இறந்தார். மற்ற 4 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து முத்துப்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.