லைஃப்ஸ்டைல்
வெற்றியை நோக்கி நம் பாதங்கள் நடக்க தயாரானால்

வெற்றியை நோக்கி நம் பாதங்கள் நடக்க தயாரானால்

Published On 2019-12-16 06:53 GMT   |   Update On 2019-12-16 06:53 GMT
வெற்றியை நோக்கி நம் பாதங்கள் நடக்க தயாரானால், அதற்கான வழிகள் நம் முன்னே பிரகாசமாக தெரியும். விடாமுயற்சியுடன் எந்த ஒரு செயலில் ஈடுபட்டாலும் வெற்றி நம்மை பின்தொடரும்.
எதை வேண்டுமானாலும் அடைய ஆசைப்படுங்கள். ஆனால் அந்த ஆசை நியாயமானதாக இருக்க வேண்டும். அதை சாதிக்க திறமை, திட்டமிடல், விடாமுயற்சி, கடின உழைப்பு ஆகியவை வேண்டும்.

எதை வேண்டுமானாலும் அடைய ஆசைப்படுங்கள். ஆனால் அந்த ஆசை நியாயமானதாக இருக்க வேண்டும். அதை சாதிக்க திறமை, திட்டமிடல், விடாமுயற்சி, கடின உழைப்பு ஆகியவை வேண்டும்.

விடாமுயற்சி

நேர்மை, பொறுமை, விடாமுயற்சி ஆகிய மூன்றும் தான் வெற்றிக்கு முக்கியம். இவை அனைத்திற்கும் மேலாக அன்பு வேண்டும் என விவேகானந்தர் கூறினார். எப்படி வேண்டுமானாலும் வாழலாம் என இல்லாமல் இப்படித் தான் வாழ வேண்டும் என்கிற கொள்கையில் வாழ்நாள் எல்லாம் ஒவ்வொரு நொடியையும் செலவிட வேண்டும். லட்சியத்தை நம்மால் அடைய முடியும் என்று நம்புவதே தன்னம்பிக்கை. எதை இழந்தாலும் இழக்கலாம். ஆனால் தன்னம்பிக்கையை என்றும் இழக்க கூடாது.

விடப்பட்ட சவால்

தேவைற்ற பொருட்களை வாங்காமல் இருப்பதே ஒருவகை வருமானம் தான். உங்களுக்கு அருகாமையில் வசிப்பவர்கள், அலுவலகத்தில் உடன் வேலை பார்ப்பவர்கள் என அனைவருடனும் என்றும் நட்பு வைத்திருக்க வேண்டும். உங்கள் வார்த்தைகள் எப்போதும் மென்மையாகவும், இனிமை கலந்தும் இருக்க வேண்டும்.

இதுதான் மற்றவர்களிடமிருந்து உதவியை பெற உங்களுக்கு உறுதுணையாக இருக்கும். உங்களிடமுள்ள குறைகளை குறைத்து நிறைகளை பெற எப்போதும் முயலுங்கள். உங்களுக்கு ஒரு பிரச்சினை ஏற்பட்டால் அது உங்கள் திறமைக்கு விடப்பட்ட சவால் என்று நினைத்து பிரச்சினைகளை அணுகுங்கள்.

வெற்றியின் ரகசியம்

படிக்க, படிக்க மனம் விரிவடையும். திறந்த மனம் வெற்றியின் விளைநிலம். பள்ளம் தான் மேட்டினை நிர்ணயிக்கிறது. குள்ளம் தான் உயர்வினை வடிவமைக்கிறது. இல்லாதது தான் இருப்பதை காட்டுகிறது. தவறு செய்வது தவறல்ல. திருத்திக்கொள்ள மறுப்பது தான் தவறு. வெற்றி ஒரு அனுபவம் என்றால் தோல்வியும் ஒரு அனுபவம் தான்.

உழைப்பதில் மகிழ்ச்சி வேண்டும். உழைக்க தயங்கி கொண்டு இருந்தால் தோல்வியை தழுவ நேரிடும். முயற்சி, பயிற்சி, உழைப்பு, மகிழ்ச்சி, நம்பிக்கை ஆகிய ஐந்தும் தான் வெற்றியின் ரகசியங்கள் ஆகும்.

மன உறுதி

எதில் ஈடுபட்டாலும் மன உறுதியோடு ஈடுபட வேண்டும். விட்டுக் கொடுத்தால் மன நிம்மதியோடு விட்டுக் கொடுக்க வேண்டும். நாளுக்கு நாள் முயற்சி கூடிக்கொண்டே இருக்க வேண்டும். இவை கூட, கூடத்தான் அதன் பலனும் கூடிக்கொண்டேயிருக்கும். முடியும் என்றால் முடிகிறது. தயங்கினால் சரிகிறது. நமக்கு எப்போதும் கை கொடுப்பது நம்பிக்கை தான். உங்கள் வாழ்க்கையில் எது செய்தாலும் ஒருபோதும் மற்றவர்களை பின்பற்றாதீர்கள். பிரதியெடுப்பது தவறு. புதுமையாக சிந்தித்து வாழ்பவனுக்கு என்றும் எதிர்காலம் உண்டு.

தேவையற்ற ஆசைகளை ஒழித்து அவசியமான ஆசைகளை வளர்த்துக் கொள்ளவேண்டும். உன் திறமையை தூண்டி விட மற்றவர்களால் முடியும். உன்னை வளர்த்துக்கொள்ள உன்னால் மட்டுமே முடியும். உண்மைக்காக எதையும் இழக்கலாம். ஆனால் எதற்காகவும் உண்மையை இழந்து விடக்கூடாது. பிறரிடம் காணும் குறையை, நம்மிடம் எப்போதும் அண்ட விடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். மற்றவர்களின் துயரங்களை பார்த்து இரக்கப்படு. உன் துயரங்களை உன்னோடு மட்டுமே வைத்துக்கொள்.

துரோகம்

உயர்ந்த பண்புக்கு அடிப்படை, சின்ன, சின்ன தியாகங்கள் ஆகும். நம்பிக்கை வைத்தவனை ஏமாற்றுவது சாமர்த்தியம் அல்ல. அது துரோகம் தான். பொறுப்பில் இருக்கும் ஒவ்வொருவரும் வெற்றியும், தோல்வியும் தம்முடைய பணியில் இருக்கிறது என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும்.

ஒரு காரியத்தை சாதிக்க நினைத்து, தோல்வி அடையும் ஒவ்வொரு சமயத்திலும் வெற்றிப்படிகளில் அடியெடுத்து வைக்கிறோம் என்று எண்ணினால் நிச்சயம் வெற்றி பெறலாம். வெற்றியை நோக்கி நம் பாதங்கள் நடக்க தயாரானால், அதற்கான வழிகள் நம் முன்னே பிரகாசமாக தெரியும். விடாமுயற்சியுடன் எந்த ஒரு செயலில் ஈடுபட்டாலும் வெற்றி நம்மை பின்தொடரும்.
Tags:    

Similar News