செய்திகள்
விபத்து

திருவண்ணாமலையில் பஸ் - பைக் மோதல்: கல்லூரி மாணவர் பலி

Published On 2019-11-11 10:21 GMT   |   Update On 2019-11-11 10:21 GMT
திருவண்ணாமலையில் பஸ்-பைக் மோதிக்கொண்ட விபத்தில் கல்லூரி மாணவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவண்ணாமலை:

திருவண்ணாமலை புது வாணியகுள தெருவை சேர்ந்தவர் அறிவு செல்வம் (20). திருவண்ணாமலையில் உள்ள தனியார் கல்லூரியில் எம்.காம். முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

நேற்றிரவு திருவண்ணாமலை காந்திரோடு வழியாக பைக்கில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.

அப்போது வேலூரில் இருந்து திருச்சிக்கு அரசு பஸ் சென்று கொண்டிருந்தது. அறிவு செல்வம் அரசு பஸ்சை முந்த முயன்றபோது எதிர்பாராதவிதமாக பைக் நிலைதடுமாறி கீழே விழுந்தது.

பைக்கை ஓட்டி வந்த அறிவுசெல்வம் பஸ்சின் பின் சக்கரத்தில் சிக்கி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அறிவுசெல்வத்தின் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News