செய்திகள்
கொரோனா வைரஸ்

நீலகிரியில் கொரோனாவுக்கு 2 பேர் பலி

Published On 2021-09-25 12:05 GMT   |   Update On 2021-09-25 12:05 GMT
நீலகிரி மாவட்டத்தில் நேற்று புதிதாக 37 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதியானது. இதன் மூலம் தொற்று பாதிப்பு எண்ணிக்கை 32 ஆயிரத்து 535 ஆக உயர்ந்து உள்ளது.
ஊட்டி:

நீலகிரி மாவட்டத்தில் நேற்று புதிதாக 37 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதியானது. இதன் மூலம் தொற்று பாதிப்பு எண்ணிக்கை 32 ஆயிரத்து 535 ஆக உயர்ந்து உள்ளது. இதுதவிர 35 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பினர். இதன் மூலம் இதுவரை 31 ஆயிரத்து 994 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். நேற்று கொரோனா பாதித்து சிகிச்சை பெற்று வந்த 2 பேர் இறந்தனர். இதன் மூலம் இதுவரை கொரோனாவால் 198 பேர் இறந்து உள்ளனர். தற்போது 343 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Tags:    

Similar News