உள்ளூர் செய்திகள்
சித்ராபவுர்ணமியை முன்னிட்டு 1008 கலச பூஜை நடந்தது.
திருமங்கலம்
திருமங்கலம் அருகே டி.புதுப்பட்டி சக்திகுளத்தில் ஸ்ரீ ஆயிரம் கண்ணுடையாள் திருக்கோவில் மகா சக்தி பீடம் அமைந்துள்ளது. இந்த கோவிலில் அன்னை 41 அடி உயரத்தில் கம்பீரமாக வீற்றிருந்தபடி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். வருடந்தோறும் சித்ரா பவுர்ணமி முன்னிட்டு அம்மனுக்கு 1008 கலச பூஜைகள் நடைபெறும்.
இந்த ஆண்டு சித்ரா பவுர்ணமி முன்னிட்டு நேற்று குடும்ப நலம் வேண்டி இந்த கோவிலில் குடும்பநல வேள்வி நடைபெற்றது. இதில் பக்தர்கள் ஒவ்வொரு வருக்கும் தனியாக குண்டத்தின் முன்பு பூஜைகள் நடத்தினர். இதனைத்தொடர்ந்து அம்மனுக்கு புனித நீர் கொண்டு 1008 கலசங்கள் மூலம் பொதுமக்களை கொண்டு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.
இதனைத்தொடர்ந்து பிரத்தியங்கிராதேவிக்கு மிளகாய் வத்தல் யாகம், ஆயிரம் கண்ணுடையாள் அம்மாளுக்கு 108 பூஜை பொருட்கள் மூலம் மகா குண்டம் அபிஷேக ஆரா தனை நடைபெற்றது. மேலும் கோரக்கிழங்கு மூலம் வராகி அம்மனுக்கு பூஜைகள் நடை பெற்றது. இந்த விழாக்களுக்கு மதுரை, விருதுநகர், கிருஷ்ணகிரி, நாமக்கல், நீலகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் வந்து பங்கேற்றனர்.