ஆன்மிகம்
தோப்புத்துறையில் புதிய பள்ளிவாசல் திறப்பு விழா இன்று நடக்கிறது
நாகை மாவட்டம் வேதாரண்யம் வட்டம் தோப்புத்துறையில் புதிய மஸ்ஜிதுல் ஆரிபின் (மலாக்கா பள்ளி) இறை இல்ல திறப்புவிழா இன்று (வெள்ளிக்கிழமை) காலை 9 மணி அளவில் நடைபெறுகிறது.
நாகை மாவட்டம் வேதாரண்யம் வட்டம் தோப்புத்துறையில் புதிய மஸ்ஜிதுல் ஆரிபின் (மலாக்கா பள்ளி) இறை இல்ல திறப்புவிழா இன்று (வெள்ளிக்கிழமை) காலை 9 மணி அளவில் நடைபெறுகிறது. விழாவில் முஸ்லிம் ஜமாத் மன்றத்தினர் மற்றும் மார்க்க அறிஞர்கள், அரசியல் பிரமுகர்கள் உள்பட ஏராளமானோர் கலந்துகொள்கிறார்கள். புதிய பள்ளிவாசல் திறப்பு விழா மலரை தொழில் அதிபரும், ஆரிபா குழுமம் தலைவருமான சுல்தானுல் ஆரிபின் வெளியிடுகிறார்.
விழாவுக்கு வருவோருக்கு அன்னதானம் மற்றும் சுத்தமான குடிநீர் வழங்கப்படுகிறது. விழா ஏற்பாடுகளை தோப்புத்துறை முஸ்லிம் ஜமாத் மன்றத்தினர், தர்கா பரிபாலன சங்கம் பள்ளிவாசல் கட்டுமான பணி குழுவினர் செய்து வருகின்றனர்.
விழாவுக்கு வருவோருக்கு அன்னதானம் மற்றும் சுத்தமான குடிநீர் வழங்கப்படுகிறது. விழா ஏற்பாடுகளை தோப்புத்துறை முஸ்லிம் ஜமாத் மன்றத்தினர், தர்கா பரிபாலன சங்கம் பள்ளிவாசல் கட்டுமான பணி குழுவினர் செய்து வருகின்றனர்.