செய்திகள்
கோவை போத்தனூரில் முதியவர் தூக்குப்போட்டு தற்கொலை
கோவை போத்தனூரில் முதியவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை:
கோவை போத்தனூர் லட்சுமி நாராயண நகரை சேர்ந்தவர் வரதராஜன் (வயது 75). இவரது மனைவி கடந்த ஆண்டு இறந்துவிட்டார். அதன் பின்னர் வரதராஜன் தனியாக வசித்து வந்தார். பக்கத்து வீதியில் வசித்து வரும் அவரது தம்பி உணவு கொடுத்து பராமரித்து வந்தார். இந்நிலையில் கடந்த சில நாட்களாக வரதராஜன் உடல் நிலை செரியில்லாமல் அவதிப்பட்டு வந்தார். இதுகுறித்து தனது தம்பியிடம் அடிக்கடி கூறி வந்தார்.
இதனால் விரக்தி அடைந்த வரதராஜன் நேற்று வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போத்தனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்த விசாரணை நடத்தி வருகின்றனர்.