செய்திகள்
கோப்புப்படம்

சென்னை விமான நிலையத்தில் ரூ.24 லட்சம் தங்கம் பறிமுதல்

Published On 2020-10-18 21:56 GMT   |   Update On 2020-10-18 21:56 GMT
துபாயில் இருந்து சென்னைக்கு சிறப்பு விமானத்தில் கடத்தி வந்த ரூ.24 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
ஆலந்தூர்:

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு துபாயில் இருந்து சிறப்பு விமானம் வந்தது. அதில் ராமநாதபுரம் மாவட்டம் எஸ்.பி.பட்டினம் பகுதியைச் சேர்ந்த ராவுத்தர் நைனா முகமது (வயது 38), மதுரையைச் சேர்ந்த அப்துல்காதத் ஜெய்லானி (34) ஆகியோர் வந்தனர்.

இவர்கள் மீது சந்தேகம் அடைந்த சுங்க இலாகா அதிகாரிகள், இருவரது உடைமைகளையும் சோதனை செய்தனர். ஆனால் அதில் எதுவும் இல்லை.

இதையடுத்து 2 பேரையும் தனி அறைக்கு அழைத்துச்சென்று சோதனை செய்தனர். அதில் 2 பேரின் உள்ளாடைகளிலும் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். அவர்களிடம் இருந்து ரூ.24 லட்சம் மதிப்புள்ள 457 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

மேலும் இது தொடர்பாக 2 பேரிடமும் சுங்க இலாகா அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
Tags:    

Similar News