ஆன்மிகம்
அப்பலாயகுண்டா வெங்கடேஸ்வர சுவாமி கோவில்

அப்பலாயகுண்டா வெங்கடேஸ்வர சுவாமி கோவிலில் பவித்ரோற்சவம் நாளை தொடக்கம்

Published On 2021-10-01 07:08 GMT   |   Update On 2021-10-01 07:08 GMT
அப்பலாயகுண்டா பிரசன்ன வெங்கடேஸ்வர சுவாமி கோவிலில் பவித்ரோற்சவம் நாளை (சனிக்கிழமை) தொடங்கி 4-ந் தேதி வரை 3 நாட்கள் நடக்கிறது.
அப்பலாயகுண்டா பிரசன்ன வெங்கடேஸ்வர சுவாமி கோவிலில் பவித்ரோற்சவம் நாளை (சனிக்கிழமை) தொடங்கி 4-ந் தேதி வரை 3 நாட்கள் நடக்கிறது. முன்னதாக இன்று (வெள்ளிக்கிழமை) அங்குரார்ப்பணம் நடக்கிறது. முதல் நாளான நாளை பவித்ரா பிரதிஷ்டா செய்யப்படுகிறது. நாளை மறுநாள் பவித்ரா சமர்ப்பணம் மற்றும் பவித்ரா ஹோமங்கள் நடக்கிறது. 4-ந் தேதி மஹா பூர்ணாஹூதி, பவித்ரா விசுஜாரனா நடைபெறும்.

பவித்ரோற்சவத்தை முன்னிட்டு தினமும் காலையில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் பிரசன்ன வெங்கடேஸ்வர சுவாமிக்கு திருமஞ்சனம் செய்யப்படுகிறது.
Tags:    

Similar News