செய்திகள்
குன்னம் அருகே எலக்ட்ரீசியன் தூக்குப்போட்டு தற்கொலை
குன்னம் அருகே எலக்ட்ரீசியன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குன்னம்:
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள நன்னை கிராமத்தை சேர்ந்தவர் கொளஞ்சி. இவரது மகன் வடிவேல்(வயது 33). இவர் எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் வடிவேல் சம்பாதிக்கும் பணத்தை குடித்துவிட்டு செலவு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதனை அவருடைய பெற்றோர் கண்டித்துள்ளனர். இதனால் மனமுடைந்த வடிவேல் குடிபோதையில் நேற்று முன்தினம் இரவு தனது கூரை வீட்டின் விட்டத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து குன்னம் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் செல்லதுரை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.