ஆட்டோ டிப்ஸ்
ஸ்கோடா கோடியக்

ஒரே நாளில் விற்றுத்தீர்ந்த ஸ்கோடா கார்

Published On 2022-01-12 09:23 GMT   |   Update On 2022-01-12 09:23 GMT
ஸ்கோடா நிறுவனத்தின் கோடியக் பேஸ்லிப்ட் மாடல் விற்பனை தொடங்கிய 24 மணி நேரத்தில் விற்றுத்தீர்ந்தது. இதன் விவரங்களை பார்ப்போம்.


ஸ்கோடா நிறுவனம் நேற்று முன்தினம் தனது கோடியக் பேஸ்லிப்ட் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. அறிமுகமான முதல் நாளிலேயே புதிய கோடியக் பேஸ்லிப்ட் மாடல் முழுமையாக விற்றுத்தீர்ந்தது. இந்தியாவில் சி.பி.யு. முறையில் கொண்டுவரப்படும் கோடியக் பேஸ்லிப்ட் விலை ரூ. 34.99 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என துவங்குகிறது.

முன்னதாக இந்த மாடல் பல்வேறு வெளிநாட்டு சந்தைகளில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய 7 சீட்டர் கோடியக் மாடலில் மேம்பட்ட என்ஜின் மற்றும் புது தொழில்நுட்பங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில் பி.எஸ்.6 புகை விதிகளுக்கு பொருந்தும் 2 லிட்டர் டி.எஸ்.ஐ. பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது.



2022 ஸ்கோடா கோடியக் பேஸ்லிப்ட் மாடலில் பட்டர்ஃபிளை கிரில், வெர்டிக்கல் ஸ்லாட்கள், குரோம் சரவுண்ட், எல்.இ.டி. ஹெட்லேம்ப், எல்.இ.டி. டி.ஆர். எல்., புதிய முன்புற பம்ப்பர், அலாய் வீல்கள், சில்வர் ரூப் ரெயில்கள், டைனமிக் டர்ன் இண்டிகேட்டர்கள், பூட் லிட் மீது ஸ்கோடா பெயர், எலெக்ட்ரிக் டெயில் கேட் மற்றும் விர்ச்சுவல் பெடல் உள்ளது.

காரின் உள்புறம் எட்டு அங்குல தொடுதிரை வசதி கொண்ட இன்போடெயின்மெண்ட் சிஸ்டம், வயர்லெஸ் கனெக்டிவிட்டி, 10.25 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல், பானரோமிக் சன்ரூப், 3-ஜோன் கிளைமேட் கண்ட்ரோல் மற்றும் பல்வேறு இதர அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.

Tags:    

Similar News