செய்திகள்
அமெரிக்க அணி

டோக்கியோ ஒலிம்பிக்: சாஃப்ட்பால் போட்டியில் அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா வெற்றி

Published On 2021-07-22 15:05 GMT   |   Update On 2021-07-22 15:05 GMT
பெண்களுக்கான சாஃப்ட்பால் போட்டி நேற்று தொடங்கிய நிலையில், தற்போது வரை ஆறு போட்டிகள் முடிவடைந்துள்ளன.
டோக்கியோ:-

டோக்கியோ ஒலிம்பிக் போட்டி அதிகாரப்பூர்வமாக நாளை  தொடங்கும் நிலையில், நேற்று தொடக்க சுற்றாக  மகளிர் சாஃப்ட்பால் விளையாட்டு   தொடங்கியது. இன்று மூன்று ஓபனிங் ரவுண்டு ஆட்டங்கள் நடைபெற்றன. முதல் ஆட்டத்தில்  அமெரிக்கா - கனடா அணிகள் மோதின. இப்போட்டியில் 7 இன்னிங்ஸ்களில் அமெரிக்கா  1 ரன் எடுத்து வெற்றி பெற்றது.

இரண்டாவதாக, மெக்சிகோ - ஜப்பான் அணிகள் மோதியதில், 8 இன்னிங்ஸ்கலில் ஜப்பான் 3 ரன்களில் வெற்றி பெற்றது. இதில், மெக்சிகோ 2 ரன்கள் எடுத்தது.

மூன்றாவதாக, இத்தாலி - ஆஸ்திரேலியா அணிகள் மோதின. ஆஸ்திரேலியா ஒரு ரன் எடுத்து வெற்றி பெற்றது. இத்தாலி ரன் அடிக்கவில்லை.

நேற்றைய ஆட்டத்தில் ஜப்பான், அமெரிக்கா, கனடா அணிகள் வெற்றி பெற்றன.
Tags:    

Similar News