செய்திகள்
ஜெருசலேமில் மர்ம நபர் துப்பாக்கிச்சூடு: ஒருவர் பலி, 3 பேர் படுகாயம்
மிகவும் பழமையான நகரமான ஜெருசலேமில் இன்று நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலியான நிலையில், 3 பேர் காயம் அடைந்தனர்.
இஸ்ரேல் தலைநகர் ஜெருசலேமில் இன்று காலை மர்ம நபர் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினார். இதில் நான்கு பேர் படுகாயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில் ஒருவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
துப்பாக்கிச்சூடு நடத்திய மர்ப நபரை, இஸ்ரேல் போலீசார் சுட்டுக்கொன்றனர்.