செய்திகள்
கைது

திருவையாறு அருகே கொள்ளிடம் ஆற்றில் மணல் அள்ளி விற்பனை செய்த 3 பேர் கைது

Published On 2021-09-14 11:31 GMT   |   Update On 2021-09-14 11:31 GMT
திருவையாறு அருகே கொள்ளிடம் ஆற்றில் அனுமதியில்லாமல் மணல் அள்ளி விற்பனை செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருவையாறு:

திருவையாறு அருகே மரூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் பாண்டியன் (23), வினோத் ராஜ் (30). இருவரும் அதே ஊரைச் சேர்ந்த மணிவண்ணன் என்பவருக்கு சொந்தமான கொள்ளிடம் படுகையில் உள்ள செங்கல் கால்வாய் குழியிலிருந்து எதிர்கரையிலுள்ள அரியலூர் மாவட்டம் இலந்தகூடம் கிராமத்தைச் சேர்ந்த குளஞ்சியப்பனுக்கு (43) சொந்தமான ஜே.சி.பி. எந்திரம் மூலம் 2 டிராக்டர்களில் மணல் அள்ளி ஏற்றி விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து மரூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மதிவாணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரித்ததில் அனுமதியில்லாமல் மணல் அள்ளி விற்பனை செய்தது தெரியவந்தது.

உடனே ஜே.சி.பி. எந்திரத்தையும் 2 டிராக்டர்களையும் பறிமுதல் செய்து மரூர் போலீஸ் ஸ்டேசனுக்கு கொண்டு சென்று, குளஞ்சியப்பன், பாண்டியன் மற்றும் வினோத் ராஜ் ஆகிய மூவரின் மீதும் வழக்குப்பதிவு செய்து, கைது செய்தார்கள்.

மேலும் இதுபற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News