ஆன்மிகம்
மதுரை பச்சரிசிகார தெரு பகுதியில் விஸ்வகர்மா ஜெயந்தி விழாவை முன்னிட்டு யாகசாலை, கலச அபிஷேகம், 108 சங்காபிஷேகம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
மதுரை பச்சரிசிகார தெரு பகுதியில் விஸ்வகர்மா ஜெயந்தி விழா நடைபெற்றது, விழாவின் தொடக்கமாக விஸ்வகர்மா சுப்ரபாதம் பாடப்பட்டது. பின்னர் அனுமன் கொடியேற்றுதல், யாகசாலை, கலச அபிஷேகம், 108 சங்காபிஷேகம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக கொரோனா நோய் முற்றிலும் ஒழிந்து உலகம் நன்மையடைய வேண்டி சிறப்பு யாகம் நடைபெற்றது. இதில் அப்பகுதி பொதுமக்களும், தமிழ்நாடு விஸ்வகர்மா இளைஞர் பேரவை உறுப்பினர்கள், நிர்வாகிகள், வக்கீல் செந்தில், பொன்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதற்கான ஏற்பாடுகளை விழா குழு தலைவர் கோபால் செய்திருந்தார்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக கொரோனா நோய் முற்றிலும் ஒழிந்து உலகம் நன்மையடைய வேண்டி சிறப்பு யாகம் நடைபெற்றது. இதில் அப்பகுதி பொதுமக்களும், தமிழ்நாடு விஸ்வகர்மா இளைஞர் பேரவை உறுப்பினர்கள், நிர்வாகிகள், வக்கீல் செந்தில், பொன்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதற்கான ஏற்பாடுகளை விழா குழு தலைவர் கோபால் செய்திருந்தார்.