உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்.

கும்பகோணத்தில் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை

Published On 2022-01-11 09:31 GMT   |   Update On 2022-01-11 09:31 GMT
கும்பகோணத்தில் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்தார்.
கும்பகோணம்:

கும்பகோணம் அருகே பரங்கிப்பேட்டையைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 26). இவரது மனைவி விஜயலட்சுமி. இவர்களுக்கு 2 வயதில் கிருஷ்ணவேணி என்ற பெண் குழந்தை உள்ளது.

கிருஷ்ணமூர்த்தி கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு செப்டிக் டேங்க் கிளீனிங் உள்ளிட்ட துப்புரவு பணி செய்வதற்காக அனக்கரை அருகே உள்ள ஒழுகச்சேரிக்கு குடிபெயர்ந்து வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று மாலை குடும்பத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அப்பகுதியில் உள்ள யூகலிப்டஸ் மரத்தில் கிருஷ்ணமூர்த்தி தூக்குமாட்டிதற்கொலை செய்து கொண்டார். 

இதுகுறித்து திருப்பனந்தாள் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News