உள்ளூர் செய்திகள்
தற்கொலை

மாரண்டஅள்ளி அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை

Published On 2021-12-04 07:32 GMT   |   Update On 2021-12-04 07:32 GMT
மாரண்டஅள்ளி அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாலக்கோடு:

தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே அமானி மல்லாபுரம் பகுதியை சேர்ந்தவர் வினோத்குமார். இவரது மகள் கீர்த்தனா (வயது18). இவர் கடந்த சில நாட்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதற்காக பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை. இதனால் மனமுடைந்து காணப்பட்ட கீர்த்தனா நேற்று முன்தினம் வீட்டில் உள்ள மின் விசிறியில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து அவரது தந்தை வினோத்குமார் மாரண்டஅள்ளி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் விரைந்து சென்று கீர்த்தனாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாலக்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இளம்பெண் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News