செய்திகள்
எடப்பாடி பழனிசாமி- அமித் ஷா

நிவர் புயல் பாதிப்பு- முதல்வர் பழனிசாமியிடம் கேட்டறிந்தார் அமித் ஷா

Published On 2020-11-26 06:34 GMT   |   Update On 2020-11-26 10:53 GMT
நிவர் புயல் பாதிப்பு குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம், உள்துறை அமைச்சர் அமித்ஷா தொலைபேசியின் வாயிலாக கேட்டறிந்தார்.
சென்னை:

நிவர் புயல் பாதிப்புகள் குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் புதுச்சேரி பகுதியில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகள் குறித்து அம்மாநில முதல்வர் நாராயணசாமியிடமும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தொலைபேசி வாயிலாக கேட்டறிந்தார்.

நிவர் புயலால் பாதிக்கப்பட்டுள்ள தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்யும் என இரு மாநில முதல்வர்களிடம் அமித்ஷா உறுதி அளித்துள்ளார்.

இதுதொடர்பாக அமித் ஷா தனது டுவிட்டரில், “தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நிவர் புயல் பாதிப்புகளை உன்னிப்பாக கண்காணித்து வருகிறோம். இதுகுறித்து தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிசாமி மற்றும் புதுச்சேரி முதல்வர் வி.நாராயணசாமியுடன் பேசியதுடன், மத்திய அரசு மாநிலத்துக்குத் தேவையான உதவிகளைச் செய்யும் என்று உறுதி அளித்துள்ளேன். ஏற்கெனவே தேசிய பேரிடர் மீட்புப் படையினர் வெள்ள பாதிப்பு பகுதிகளில் பணியில் உள்ளனர்” என்று பதிவிட்டுள்ளார். 
Tags:    

Similar News