செய்திகள்
தமிழ்நாட்டிற்கு புயல் நிவாரண நிதி கூடுதலாக தேவை- ராமதாஸ் டுவிட்டர் பதிவு
புயல் பாதிப்புகளை சரி செய்ய மத்திய அரசு கூடுதல் நிதி உதவி வழங்க வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
சென்னை:
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டில் புரெவி, நிவர் புயல் பாதிப்புகளுக்கு ரூ.286.91 கோடி நிதி உதவியை மத்திய அரசு அறிவித்துள்ளது. அடுத்தடுத்து தாக்கிய இரு புயல்களால் தமிழகத்தின் பெரும் பான்மையான மாவட்டங்கள் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில், அவற்றை சரி செய்ய இந்த உதவி போதுமானதல்ல.
புரெவி, நிவர் புயல் பாதிப்புகளை சரி செய்ய தமிழக அரசின் சார்பில் ரூ.5264.38 கோடி நிதி உதவி கோரப்பட்டிருந்தது. ஆனால் அதில் 5 விழுக்காடு மட்டுமே நிவாரணமாக வழங்கப்பட்டுள்ளது. புயல் பாதிப்புகளை சரி செய்ய மத்திய அரசு கூடுதல் நிதி உதவி வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியுள் ளார்.