செய்திகள்
சக்சேனா

கிரிக்கெட் வீரரான ஜல் சக்சேனாவின் வேதனையான அரிய சாதனை

Published On 2019-08-28 15:47 GMT   |   Update On 2019-08-28 15:47 GMT
உள்ளூர் கிரிக்கெட்டில் 6 ஆயிரம் ரன்கள் அடித்ததுடன் 300-க்கும் அதிகமான விக்கெட்டுக்கள் வீழ்த்திய 19-வது வீரர் என்ற சாதனையுடன் வேதனையான சாதனையும் படைத்துள்ளார் சக்சேனா.
கேரளாவைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் ஜலில் சக்சேனா. இவர் தற்போது மத்திய பிரதேச அணிக்காக விளையாடி வருகிறார். தற்போது துலீப் டிராபி தொடரில் விளையாடி வருகிறார். இவர் உள்ளூர் முதல் தர போட்டியில் 6 ஆயிரம் ரன்கள் அடித்ததுடன் 300 விக்கெட்டுக்கள் கைப்பற்றியுள்ளார்.

முதல்தர போட்டிகளில் இந்த சாதனையைப் படைத்த 19-வது வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். ஆனால், மற்ற 18 பேரும் இந்திய தேசிய அணிக்காக விளையாடியுள்ளனர். இவருக்கு மட்டுமே தேசிய அணியில் இடம் கிடைக்கவில்லை. இதன்மூலம் முதல் தர போட்டியில் சாதனைப்படைத்தும், இந்திய கிரிக்கெட் அணியில் இடம் கிடைக்காத ஒரே வீரர் என்ற மோசமான அரிய வகை சாதனையை படைத்துள்ளார்.
Tags:    

Similar News